இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 11, 2017

ULUNTHU KALI RECIPE FOR WOMEN .... தமிழில்

பெண் என்பவள் தாயாக..தாரமாக..ஏவலாளாக ஓடி ஓடி வேலை செய்பவள்.இதை மனதில் கொண்டே நம் முன்னோர்கள் பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை மனதில் கொண்டு பூப்பெய்தவுடன் உளுந்து களி கொடுக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி இருந்தனர்.அதன் செய்முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


தேவையான பொருட்கள் ;

பச்சரிசி -ஒரு கப்
முழு கருப்பு உளுந்து - ஒரு கப்
பனை வெல்லம் - கால் கிலோ
நல்லெண்ணெய் - 100 மி.லி
ஏலக்காய் - 2
உப்பு  - ஒரு சிட்டிகை

செய்முறை ;


  • அரிசி ,உளுந்து இரண்டையும் இலேசாக வறுத்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • பனைவெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டு இலேசாக கொதிக்கவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • ஒரு  அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள மாவை ஆப்ப மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • ஏலக்காய்,உப்பு இரண்டையும் சேர்த்துவிடவும்.
  • தண்ணீர் கொஞ்சம் வற்றி மாவு வெந்ததும் பனைவெல்ல கரைசலை சேர்க்கவும்.

  • மிதமான தீயிலேயே கைவிடாமல் கிளறவும்.
  • மாவு கெட்டியாகி இளகிய பதத்தில் வரும்போது நல்லெண்ணெயை சேர்க்கவும்.
  • மாவு நன்கு சுருண்டு அல்வா பதத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வரவேண்டும்.அதுவரை கைவிடாமல்,மிதமான தீயிலேயே கிளறவேண்டும்.
  • நல்லெண்ணெய் பிரிந்து மேலே வரும்.அந்த நிலையில் அடுப்பை அனைத்து பரிமாறவும்.
  • பிள்ளைகள் சாப்பிடுவதாக இருந்தால் முந்திரியை நெய்யில் வறுத்து இதனோடு சேர்த்து கிளறி இறக்கலாம்.
இதை பூப்பெய்திய பெண்கள், கருவுற்ற பெண்கள் ,பிள்ளை பெற்ற பெண்கள் ,மாதவிலக்கு நிற்கும் நிலையில் உள்ள பெண்கள் என  எல்லோருக்கும் கொடுக்கலாம்.இதனால் இடுப்பு வலுப்பெறுவதோடு உடலுக்கு சக்தியையும் கொடுக்கும்.உடலளவில் பலகீனமாகவுள்ள பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய அருமருந்து இது.







No comments:

Post a Comment