ஹேர் டை எனப்படும் கூந்தல் சாயம் இன்று எல்லோரையும் இளமையாக வைத்திருக்க உதவும் ஒரு முக்கிய பொறுப்பை வகித்துவருகிறது.நாற்பது வயதை தாண்டிய ஒவ்வொருவரும் தம்முடைய மாதாந்திர பட்ஜெட்டில் கூந்தல் சாயத்துக்கும் ஒரு நிரந்தர இடத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஆனால் கடைகளில் விற்கும் கூந்தல் சாயங்கள் நம் உடலுக்கு நல்லதா என்று கேட்டால் தயங்காமல் சொல்லலாம் இல்லை என்று.கூந்தல் சாயங்களில் பயன்படுத்தப்படும் அம்மோனியா என்ற ரசாயனப்பொருள் ஒவ்வாமையையும் ,நாளடைவில் புற்று நோயையையும் வரவழைக்கக்கூடியவை.சரி..அம்மோனியா இல்லாத ஹேர் டை உபயோகிக்கலாமா என்று கேட்டால் அதுவும் கூடாது என்று தைரியமாக சொல்லலாம்.ஏனெனில் அம்மோனியா மட்டும் கெடுதல் கிடையாது.சோடியம் கார்பனேட் ,ஹைட்ரஜன் பெராக்சைடு ,மெத்தைல் பினால் போன்ற பிற பொருள்களும் ஹேர் டையில் கலந்திருக்கின்றன.இவைகளும் இரத்த புற்றுநோய்,நுரையீரல் வீக்கம்,தோல் எரிச்சல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதற்கு என்னதான் தீர்வு என்றால் ,அனைவரும் இயற்கைக்கு திரும்பவேண்டும்.இதுவே தீர்வு.இயற்கையில் தரமான வண்ணத்தை தலைமுடிக்கு கொண்டுவரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.கீழே தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் முடியின் நிறத்தை கருமையாக்க முடியும்.இவை அனைத்துமே நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை.
நிலாவரை பொடி -100 கிராம்
மருதாணி பொடி - 100 கிராம்
அவுரிப்பொடி - 100 கிராம்
தான்றிக்காய் பொடி -100 கிராம்
கடுக்காய் பொடி - 100 கிராம்
நெல்லிக்காய் பொடி - 100 கிராம்
வெந்தயபொடி - 100 கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள்.தேவைப்படும்போது இவற்றில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி எடுத்து பீட்ரூட் சாறு கலந்து தலைக்கு தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசவும்.இதை முதல்நாள் இரவே தயாரித்து வைத்து உபயோகித்தால் இன்னும் பயன்தரும். பீட்ரூட் சாறுக்கு பதிலாக காபி அல்லது தேயிலை நீரை பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment