இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 11, 2017

Malabar mutton biriyani.. easy steps in தமிழில்

தேவையான பொருட்கள்;

மட்டன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
புதினா - ஒரு பிடி
கொத்துமல்லி - 2 பிடி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால்  - 1 கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை - சிறிதளவு


செய்முறை ;

  • கறியை சுத்தம் செய்து அதோடு கொஞ்சம் இஞ்சிபூண்டு விழுது ,தயிர்,உப்பு ,மஞ்சள் பொடி  சேர்த்து ஊறவைக்கவும்.
  • பாஸ்மதி அரிசியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,புதினா,கொத்துமல்லி அனைத்தையும் தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
  • இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் ஊற்றி அது காய்ந்ததும் பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை அனைத்தையும் போட்டு பின் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • நன்கு வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் இது நன்கு வாசனை வரும்வரை வதக்கவேண்டும்.
  • அடுத்து தக்காளி பச்சைமிளகாய் புதினா போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அந்த அளவுக்கு பிரியாணி சுவையாக இருக்கும்.
  • இப்போது ஊறவைத்துள்ள கறியை போட்டு வதக்கவும்.
  • இந்த நிலையில் மிளகாய்ப்பொடி,கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கறி நன்கு வதங்கியதும் தேவையான உப்பு மற்றும் ஒரு குவளை தண்ணீர் விட்டு குக்கரின் மூடிபோட்டு மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  • அதே நேரம் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்து அதனோடே ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு போட்டு கிளறவும்.
  • ஒரு நிமிடம் இவ்வாறு கிளறிய அரிசியை குக்கரிலுள்ள கறியோடு சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் பால்  சேர்க்கவும்.அரை கிலோ அரிசிக்கு குக்கரில் தண்ணீரின் அளவு மொத்தமாக ஒருலிட்டருக்கு கொஞ்சம் குறைவாக இருக்கவேண்டும்.
  • உப்பை சரிபார்த்து இன்னும் சேர்க்கவேண்டுமானால் சேர்க்கவும்.
  • கொத்துமல்லியை சேர்க்கவும்.
  • நெய் மற்றும் எலுமிச்சையை சேர்க்கவும்.
  • நன்கு கொதிக்கவிடவும்.அவ்வப்போது அரிசி உடைந்துவிடாமல்  கறியோடு கிளறி விடவும்.
  • பாதியளவு தண்ணீர் வற்றியதும் மீண்டும் குக்கரின் மூடியை போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
  • பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து இலேசாக கிளறிவிட்டு மூடவும்.இரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஒவ்வொரு அரிசியும் மலர்ந்தது போல் நிற்கும்.நீங்கள் கிளறி மூடாமல் விட்டால் இதுபோல் வராது.
  • இப்போது சுவையான மலபார் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு தயார்.
டிப்ஸ் ;
  1. எப்போதும் பிரியாணிக்கு கறியின் அளவும்,அரிசியின் எடையும் சமமாக இருக்கவேண்டும்.
  2. ஒரு கப் அரிசிக்கு இரண்டு தக்காளி என்ற அளவில் எடுக்கவேண்டும்.
  3. அரிசி சேர்த்ததும் சிறிது நெய் விடுவது சாதம் ஒட்டாமல் தடுக்கும்.
  4. பால் சேர்க்கும் பிரியாணி வெளிர் நிற வண்ணத்தில் பார்வைக்கும் அழகாய் இருக்கும்.காரத்தையும் மட்டுப்படுத்தும்.
  5. பால் சேர்க்கும்போது சிறிது லெமன் எல்லோ கலரை கரைத்து சேர்த்தால் பிரியாணி கலர் தூக்கலாக தெரியும்.


No comments:

Post a Comment