தேவையான பொருட்கள்;
மட்டன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
புதினா - ஒரு பிடி
கொத்துமல்லி - 2 பிடி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 1 கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை - சிறிதளவு
செய்முறை ;
மட்டன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
புதினா - ஒரு பிடி
கொத்துமல்லி - 2 பிடி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 1 கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை - சிறிதளவு
செய்முறை ;
- கறியை சுத்தம் செய்து அதோடு கொஞ்சம் இஞ்சிபூண்டு விழுது ,தயிர்,உப்பு ,மஞ்சள் பொடி சேர்த்து ஊறவைக்கவும்.
- பாஸ்மதி அரிசியை தனியே ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும்.
- வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,புதினா,கொத்துமல்லி அனைத்தையும் தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
- இப்போது ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் ஊற்றி அது காய்ந்ததும் பட்டை,லவங்கம்,சோம்பு,பிரிஞ்சி இலை அனைத்தையும் போட்டு பின் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- நன்கு வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் இது நன்கு வாசனை வரும்வரை வதக்கவேண்டும்.
- அடுத்து தக்காளி பச்சைமிளகாய் புதினா போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அந்த அளவுக்கு பிரியாணி சுவையாக இருக்கும்.
- இப்போது ஊறவைத்துள்ள கறியை போட்டு வதக்கவும்.
- இந்த நிலையில் மிளகாய்ப்பொடி,கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
- கறி நன்கு வதங்கியதும் தேவையான உப்பு மற்றும் ஒரு குவளை தண்ணீர் விட்டு குக்கரின் மூடிபோட்டு மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.
- அதே நேரம் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்து அதனோடே ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு போட்டு கிளறவும்.
- ஒரு நிமிடம் இவ்வாறு கிளறிய அரிசியை குக்கரிலுள்ள கறியோடு சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் பால் சேர்க்கவும்.அரை கிலோ அரிசிக்கு குக்கரில் தண்ணீரின் அளவு மொத்தமாக ஒருலிட்டருக்கு கொஞ்சம் குறைவாக இருக்கவேண்டும்.
- உப்பை சரிபார்த்து இன்னும் சேர்க்கவேண்டுமானால் சேர்க்கவும்.
- கொத்துமல்லியை சேர்க்கவும்.
- நெய் மற்றும் எலுமிச்சையை சேர்க்கவும்.
- நன்கு கொதிக்கவிடவும்.அவ்வப்போது அரிசி உடைந்துவிடாமல் கறியோடு கிளறி விடவும்.
- பாதியளவு தண்ணீர் வற்றியதும் மீண்டும் குக்கரின் மூடியை போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
- பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து இலேசாக கிளறிவிட்டு மூடவும்.இரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஒவ்வொரு அரிசியும் மலர்ந்தது போல் நிற்கும்.நீங்கள் கிளறி மூடாமல் விட்டால் இதுபோல் வராது.
- இப்போது சுவையான மலபார் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு தயார்.
டிப்ஸ் ;
- எப்போதும் பிரியாணிக்கு கறியின் அளவும்,அரிசியின் எடையும் சமமாக இருக்கவேண்டும்.
- ஒரு கப் அரிசிக்கு இரண்டு தக்காளி என்ற அளவில் எடுக்கவேண்டும்.
- அரிசி சேர்த்ததும் சிறிது நெய் விடுவது சாதம் ஒட்டாமல் தடுக்கும்.
- பால் சேர்க்கும் பிரியாணி வெளிர் நிற வண்ணத்தில் பார்வைக்கும் அழகாய் இருக்கும்.காரத்தையும் மட்டுப்படுத்தும்.
- பால் சேர்க்கும்போது சிறிது லெமன் எல்லோ கலரை கரைத்து சேர்த்தால் பிரியாணி கலர் தூக்கலாக தெரியும்.

No comments:
Post a Comment