இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 2, 2017

என்ன விலை அழகே...! SIMPLE & NATURAL BEAUTY TIPS.

இன்றைய அழகு சாதனப்பொருட்களில்  சந்தையில் அதிகஅளவு ஆக்கிரமித்திருப்பது பெண்களுக்கான மெருகூட்டும் பொருட்கள் தான்.ஆனால் எவ்வளவுதான் இதுமாதிரியான பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் இயற்கையான பொருட்களுக்கு ஈடாகுமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.உதாரணமாக ஒருவர் முகப்பூச்சு கிரீம் -ஐ காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்  என்று வைத்துக்கொள்வோம்.இன்னொருவர் கடலை மாவையும்,தக்காளி,தயிர் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகிறார்.சிலகாலம் கழித்து இருவர் முகங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் முகப்பூச்சு கிரீம் பயன்படுத்தியவரின் முகம் சாம்பல் பூத்தது போல தன் சுயரூபத்தை இழந்து காணப்படும்.ஆனால் இயற்கை பொருட்களை மட்டுமே உபயோகித்தவரின் முகமோ எழில் கூடி பிரகாசமாக இருக்கும்.எனவேதான் இயற்கைக்கு ஈடு எதுவுமில்லை என்று முன்னோர்கள் எச்சரித்தனர்.தலை முதல் கால்வரை காசுகொடுத்து அழகுபடுத்தும் கலாச்சாரம் பெருகிவிட்ட இக்காலத்தில் எளிய முறையில் இயற்கையின் பரிசான சில பொருட்களை கொண்டு நம்மை அழகுபடுத்திக்கொள்வது எப்படி என்று அடுத்து வரும் வரிகளில் அறிந்துகொள்ளலாம்.

  • வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை கட்டாயமாக்குங்கள்.இது உங்கள் உடல் சூட்டை தணித்து முடி கொட்டுவதை கட்டுப்படுத்தும்.
  • வெந்தயம்,செம்பருத்தி இலை ,கரிசலாங்கண்ணி இவற்றில் ஏதாவது ஒன்றோடு ஒரு பிடி மருதாணி இலையை அரைத்து தலைக்கு தடவி ஒருமணிநேரம் கழித்து குளியுங்கள்.இது உங்கள் கூந்தலை மென்மையாக்குவதோடு கருமையாகவும் மாற்றும் மேஜிக் .
  • முகத்துக்கு தினசரி பூச்சாக கடலைமாவு,தக்காளி,பப்பாளி கூழ்,தயிர்,முல்தானி மெட்டி ,எலுமிச்சை,ஆப்பிள் சீடர் வினிகர் இவற்றில் ஏதாவது ஒன்றை வழக்கப்படுத்துங்கள்.இது உங்கள் முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவதோடு முகத்தை பிரகாசமாகவும்  மாற்றும்.

  • கற்றாழை,தேன் ,ரோஜா இதழ் இவற்றையும் உங்கள் முகத்துக்கு மாற்றி மாற்றி உபயோகப்படுத்துங்கள்.இது செழிப்பான ,பளபளப்பான தோற்றத்தை மேம்படுத்தி கொடுக்கும்.
  • படுக்கப்போகும்  முன் கை ,கால்களுக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள்.இது உங்கள் தோல்பகுதி சுருக்கமில்லாமல் செழிப்பாக அழகாக தோன்றச்செய்யும்.
  • குளிக்கும்போது குதிகால்களை சொரசொரப்பான கல்லில் இலேசாக தேய்த்து குளியுங்கள்.இது குதிகால்களில் வெடிப்புகள் இல்லாமல் உங்களை பாதுகாக்கும்.
  • பேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும் பிளக்கர் -ஐ (plucker ) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்.அவ்வப்போது உங்கள் புருவத்தின் முடிகளை அழகிய வளைவாக சீர்படுத்துங்கள்.இது உங்கள் முகத்துக்கு ஒரு அழகான தோற்றத்தைக்கொடுக்கும்.நீங்கள் உங்கள் புருவத்தை சீர்படுத்தும்போது புருவத்தின் கீழ்ப்பகுதியை மட்டும்நீக்குங்கள்.அப்போதுதான் உங்கள் புருவம் அழகிய வளைவாக வரும்.புருவத்தின் மேல் பகுதியை நீக்கினால் உங்கள் புருவம் வளைவாக இல்லாமல் நேராக இருக்கும்.இது பார்க்க அழகாக இருக்காது.
  • கால் விரல் நகங்களை வெட்டி நக சாயம் பூசுங்கள்.இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

  • உணவில் காய்கறி,பழங்கள்.தானியங்கள் போன்றவற்றை அதிகப்படுத்தி மாவுப்பொருட்களை குறையுங்கள்.இதனால் உங்கள் எடை கட்டுப்படுவதோடு உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும்.
  • உங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள்.இது உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது ஒரு தன்னம்பிக்கையை கொண்டுவரும்.

No comments:

Post a Comment