இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 9, 2017

How to maintain silk sarees... தமிழில்

பெண்கள் விரும்பும் அழகான ,ஆடம்பரமான ,விலைமதிப்புள்ள விஷயம் எதுவென்றால்  அது  பட்டுப்புடவைதான்.நம் நாட்டு பெண்களின் பட்டுப்புடவை கட்டும் அழகைப்பார்த்து வெளிநாட்டு பெண்களும் மயங்கி அவர்களும் அதை பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அதற்கு காரணம் பட்டுபுடவையின் அழகுதான்.பட்டு இல்லாமல் எந்த விசேஷமும் இல்லை.அந்த அளவுக்கு தங்கத்துக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பட்டுக்கும் நாம் கொடுக்கிறோம்.அத்தகைய சிறப்பு வாய்ந்த பட்டுப்புடவையை பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் சீக்கிரமே அந்த புடவை பொலிவிழந்துவிடுகிறது.இதனால் மனதளவில் நாம் சோர்ந்துபோகிறோம்.பட்டுப்புடவையை முறையாக பராமரிப்பது எப்படி என்று நாம் தெரிந்து கொண்டால் இந்த சங்கடங்கள் இல்லைதானே.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

  • பட்டுபுடவையின் முதல் சலவையில் சோப்பு உபயோகப்படுத்தக்கூடாது.வெறும் தண்ணீரில் பத்துநிமிடம் ஊறவைத்து அலசிவிடவேண்டும்.
  • பிரஷ் கொண்டு தேய்ப்பதோ,அடித்து துவைப்பதோ கூடாது.

  • அடுத்தடுத்த சலவைகளுக்கு ஷாம்பு பயன்படுத்தி துவைக்கலாம்.சோப்புத்தூளுக்கு பதிலாக ஷாம்பூவை தண்ணீரில் கலக்கி சிலநிமிடங்கள் புடவையை ஊறவைத்து பின்  இலேசாக கைகளால் கசக்கி பின் அலசிவிடவேண்டும்.
  • வாஷிங்மெஷினில் பட்டுபுடவைகளை துவைக்கவே கூடாது.
  • பட்டுப்புடவையை கட்டி அவிழ்த்தபின்  சிறிதுநேரம் காற்றில் உலரவைத்து பின் மடித்து வைக்கவேண்டும்.ஒவ்வொருமுறை கட்டிய பின்னும் அலசவேண்டும் என்பது இல்லை.

  • பட்டுப்புடவையை எப்போதும் நிழலிலேயே உலர்த்த வேண்டும்.எக்காரணம் கொண்டும் வெயிலில் உலர்த்தக்கூடாது.
  • பட்டுப்புவையின் ஜரிகை மேல் நேரிடையாக இஸ்திரி போடக்கூடாது.இது ஜரிகையை பாதிக்கும்.
  • பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியிலோ,பிளாஸ்டிக் கவரிலோ போட்டு வைக்கக்கூடாது.நன்கு இஸ்திரி போட்டு மடித்து வைத்த புடவையை ஒரு வெண்மைநிற பருத்திப்பையில் போட்டுவைத்தால் புடவையின் ஆயுள் கூடும்.நாம் வெளியூர் செல்லும்போது அப்படியே எடுத்துச்செல்லலாம்.

  • பட்டுப்புடவையை உபயோகப்படுத்தாமல் அப்படியே வைக்கவும் கூடாது.மடிப்புகள் விட்டுப்போய் புடவை பாழ்பட்டுவிடும்.எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை புடவையை பிரித்து மடிப்பை மாற்றி மடித்துவைக்கவேண்டும்.
  • விலை உயர்ந்த பட்டுபுடவைக்கு  உலர் சலவையே சிறந்தது.
  • பட்டுப்புடவையை அலசும்போது பூந்திக்கொட்டையை ஊறவைத்த நீரில் அலசினால் புடவையின் பளபளப்பு மங்காமல் இருக்கும்.

No comments:

Post a Comment