இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 28, 2017

Marina Paruthipal Payasam ... தமிழில்

பருத்திப்பால் பாயசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய கோடைகாலத்துக்கு ஏற்ற ஒரு பானம் .சென்னை,மதுரை போன்ற பெருநகரங்களில் கூட பருத்திப்பால் பாயசம் மிக பிரபலம்.மெரினாவில் காலை நடைப்பயிற்சிக்கு பின்னர் பருத்திப்பால் பாயசம் சாப்பிடாமல் வருபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.இன்று நாம் சுவைக்கப்போவதும் மெரினாவின் பருத்திப்பால் பாயாசம்தான்.வாங்க போகலாம்.



தேவையான பொருட்கள்;

பருத்திக்கொட்டை - 100 கிராம்
வெல்லம் - 100 கிராம்
சேமியா - 2 கைப்பிடி
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை                            
முந்திரி திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் - 2
பால் - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை ;
பருத்திக்கொட்டையை முதல்நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதை மிக்ஸியில்இரண்டு குவளை நீர்விட்டு  நன்கு அரைத்து பின் வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.பின்னர் அடி கனமான பாத்திரத்தில் அரைத்துவைத்துள்ள பருத்திப்பாலை ஊற்றி நன்கு காய்ச்சவேண்டும்.நன்கு கொதித்ததும் சேமியா மற்றும் பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.சேமியா வெந்ததும் உப்பு,வெல்லம் ,சுக்குப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் பாலையும் அதோடு கலந்து தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.இறுதியாக முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.இப்போது சுவையான மெரினா பருத்திப்பால் பாயசம் தயார்.