தேவையான பொருட்கள்;
திராட்சை - 1 கிலோ
சர்க்கரை - 1கிலோ
கோதுமை - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 லிட்டர்
செய்முறை;
திராட்சை - 1 கிலோ
சர்க்கரை - 1கிலோ
கோதுமை - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 லிட்டர்
செய்முறை;
- திராட்சை , கோதுமை, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- தண்ணீரை நன்கு சூடுபடுத்தி ஆறவைத்துக்கொள்ளவும்.
- ஈஸ்ட்டை அரை கப் நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- சர்க்கரையை நீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும்வரை சூடுபடுத்தவும்.
- ஒரு சுத்தமான பீங்கான் ஜாடியில் திராட்சையை போட்டு மத்தால் மெதுவாக மசித்துவிடவும்.
- பின்னர் அரிசி,கோதுமை இரண்டையும் போட்டு இன்னும் நன்றாக மத்தால் அழுத்தி கடையவும்.
- இப்போது சர்க்கரை கரைசல்,ஈஸ்ட் கரைசல் இரண்டையும் ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நீளமான மரக்கரண்டியால் கலக்கிவிடவும்.
- ஜாடியை நன்கு மூடி காற்று புகாத இடத்தில் 45 நாட்களுக்கு வைக்கவும்.
- தினமும் ஒருமுறை நீளமான மரக்கரண்டியால் கிளறிவிட்டு மூடவும்.
- 45 நாட்களுக்கு பிறகு ஜாடியை திறந்து இலேசாக கலக்கிவிட்டு மெல்லிய துணியால் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இப்போது சுவையான திராட்சை ஒயின் தயார்.நாட்கள் செல்ல செல்ல இதன் சுவை அதிகரிக்கும்.எனவே அதிககாலம் பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment