இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Mar 11, 2017

How to Maintain Sewing Machine.... தமிழில்

தையல் மெஷின் பராமரிப்பு என்பது மெஷினின் ஆயுள்காலத்தை அதிகரிக்க செய்ய நாம் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு வழிமுறையாகும்.சில எளிய வழிமுறைகள் மூலம் நாம் நமது தையல் இயந்திரத்தின் ஆயுள்காலத்தை இருபது ..இருபத்தைந்து வருடங்களுக்கு மேலும் நீட்டிக்க முடியும்.தொடர்ந்து படியுங்க.. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கோங்க.


  • தையல் இயந்திரத்தின் எல்லா பாகங்களுக்கும் வாரத்தில் இரண்டுமுறை கட்டாயம் எண்ணெய் விடவேண்டும்.
  • தூசு,துகள்கள் இருந்தால் உடனடியாக துடைத்து சுத்தம்செய்யவேண்டும்
  • ஊசிக்கு கீழேயுள்ள பற்கள்போன்ற பகுதியை கழற்றி அதன் கீழே இருக்கும் நூல்களை அடிக்கடி சுத்தம்செய்யவேண்டும்.இல்லாவிட்டால் தையல் ஒழுங்காக இருக்காது .
  • சில நேரங்களில் தையல் முடிச்சு முடிச்சாக விழும்.அவ்வாறு விழும் முடிச்சானது துணியின் மேல் பகுதியில் விழுந்தால் தையல் இயந்திரத்தின் அடிப்பகுதியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.அதே சமயம் முடிச்சு துணியின் கீழ்ப்பகுதியில் விழுந்தால் இயந்திரத்தின் மேல் பகுதியில் தான் பிரச்சனை என்று எளிதாக அறிந்துகொள்ளலாம்.
  • துணியின் மேலே பகுதியில் முடிச்சுகள் விழுந்தால் கீழே பாபினில் சரிசெய்யவேண்டும்.நூல் இழுக்கும்போது ஈஸியாக வருகிறதா என்று ஆய்வு செய்யவேண்டும்.
  • ஊசியை சரியாக பொருந்தாமல் இருந்தால் தையல் விழாது.
  • தைக்கும்போது  துணி இழுத்துக்கொண்டு வந்தால்  ஊசியில் பழுது என நினைவில் கொள்ளவும்.ஊசியை மாற்றினால் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.
  • சிரமம் பார்க்காது ஒருமுறை சிறிய ரக மோட்டாரை உங்கள் தையல் இயந்திரத்தில் பொறுத்திவிட்டால் நேரம் மிச்சமாவதோடு மலைப்பாகவும் இருக்காது.சிறிய இயந்திரத்திற்கான மோட்டார் ஆயிரம் ரூபாய் செலவுக்குள் அடங்கிவிடும்.

  • மோட்டார் உபயோகப்படுத்தும்போது அதற்கான பெடலை பாதத்தின் கீழே வைத்து அழுத்தாமல் இயந்திரத்தின் பக்கவாட்டில் நம் முட்டிக்கு நேராக இயந்திரத்தோடு சேர்த்து கட்டிவிட்டால் நாம் தைக்கும்போது முட்டியை இலேசாக சாய்த்து பெடலை அழுத்தி மோட்டாரை இயக்கலாம்.
  • இவ்வாறு செய்யும்போது பெடலில் மண்,தூசுகள் போன்றவை சென்று அடைவதை தடுப்பதோடு நமக்கு இயக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
  • இயந்திரத்தின் அருகில் ஒரு காந்தத்தை ஒட்டி வைத்தால் ஊசி,பொத்தான் போன்றவை சிதறி கீழே விழாமல் காந்தத்தில் ஒட்டிவைத்து  பயன்படுத்தலாம்.
  • உபயோகப்படுத்தாத நேரங்களில் இயந்திரத்தை எப்போதும் மூடியே வைக்கவேண்டும்.ஏனெனில் தூசு துகள்கள் இயந்திரத்தில் போட்டுள்ள எண்ணெயில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பாக மாறி அழுக்காக்கிவிடும்.



No comments:

Post a Comment