இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 19, 2017

சர்க்கரை நோயிலிருந்து தப்பமுடியுமா ...?

சில காலங்களுக்கு முன் பணக்கார வியாதியாக  மட்டுமே இருந்த சர்க்கரை நோய் இப்போது எல்லாத்தரப்பு மக்களையும் ஆட்டி படைக்கும் வியாதியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு குறைபாடே தவிர வியாதி அல்ல என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.நீரிழிவு நோய் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் சர்க்கரை நோய் ஆரம்ப காலகட்டத்தில் எந்த வித அறிகுறிகளையும் நமக்கு காட்டுவதில்லை.ஆனால் நம்மில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்  பாதிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் செல்கிறதாம்.உடலின் உள் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நம்மில் பலபேர் இந்நோய் இருப்பதை கண்டறிகின்றனர்.எனவே தான்  முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.நம்முடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நாம் தயாராகும்போதே ஒரு சிறிய பரிசோதனைக்கும் நேரத்தை ஒதுக்குவதில் தவறில்லை தானே..?


மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசி உள்ளிட்ட மாவுசத்து பொருட்களை அறவே தவிர்த்துவிடுகிறார்கள்.அது தவறு.அளவோடு மாவுச்சத்துப்பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது உடல் செயல்பாட்டுக்கு உதவும்.நம்முடைய சராசரி எடையைவிட அதிக எடையில் நாம் இருக்கும்போது சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது சர்க்கரை நோயை அருகில் வரவிடாமல் தடுக்கும் முதல் வழி என்றே கூறலாம்.ஒல்லியாக உள்ளவர்களுக்கும் வயிற்றில் அதிக கொழுப்பு படிவதால் சர்க்கரை நோய் அபாயம் உண்டு.


சர்க்கரை நோய்க்கு சர்க்கரை மட்டுமேகாரணம் இல்லை.மரபணு,சுற்று சூழல் போன்ற பிற பல காரணங்களும் உண்டு.ஆரோக்கியமான உணவுமுறை,பழக்கவழக்கம் போன்றவற்றின் மூலம்  இதனை நாம் தடுத்திடமுடியும்.மேலும் சர்க்கரை நோய்களுக்கென்றே சில உணவுப்பொருட்களை நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றுள்ளனர்.வெந்தயம்,பாகற்காய்,நாவற்பழம்,ஆடாதொடை ,கோவைக்காய்,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இவற்றை தினம் ஒரு உணவு என்று நாம் எடுத்துக்கொண்டாலே சர்க்கரை நோய் அபாயத்திலிருந்து எளிதாக தப்பிவிடமுடியும்.



No comments:

Post a Comment