இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 11, 2017

வாயுத்தொல்லையை விரட்ட சில வழிமுறைகள்.

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பலப்பல உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பரவலாக பெரும்பாலோனோர்கள் சந்திக்கும் ஒரு விஷயம் வாயுத்தொல்லை. வாயுத்தொல்லையால் வரும் சுகவீனங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். நெஞ்சுவலி,மூட்டுவலி,நரம்புவலி என்று இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.இதிலிருந்து நாம் வெளியே வரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.நமது உணவு பழக்கவழக்கமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும்.. நாம் இந்த பிரச்சனையை முற்றிலும் நீக்கிவிடலாம்.வாயுத்தொல்லையை நீக்குவதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கு பார்ப்போம்

1.பிரண்டை.. இது எலும்பு உறுதிக்கு மட்டுமல்ல..வாயுத்தொல்லைக்கும் சிறந்த இயற்கை நிவாரணி.வாரம் ஒரு முறை பிரண்டையை உணவில் சேர்த்துவர வாயுத்தொல்லை நீங்கும்.
2.உணவில் துவரம்பருப்புக்கு பதிலாக பாசிப்பருப்பை சேருங்கள்.
3.தினமும் ஒரு முறை சுக்குமல்லி காபி அருந்துங்கள்.
4.இரவு உறக்கத்துக்கு முன்பு பாலோடு பூண்டு சேர்த்து வேகவைத்து அருந்துங்கள்.

5.புதினா,முடக்கத்தான் கீரையை உணவில் வழக்கப்படுத்துங்கள்
6.சுக்கு 20கிராம்,மிளகு 20கிராம், திப்பிலி 20 கிராம், ஓமம் 20 கிராம், வாய்விளங்கம் 20 கிராம், பெருங்காயம் 20கிராம், இந்துப்பு 10 கிராம் எடுத்து, இவற்றை வறுத்து பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் அரை தேக்கரண்டி வீதம் இதை தண்ணீரோடு கலந்து உட்கொண்டு வரும்போது நாளடைவில் வாயுத்தொல்லையை வரட்டிவிட முடியும்.
7. ஆள்காட்டி விரலை கட்டைவிரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்தம்கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

 இந்த வாயு முத்திரையை தொடர்ந்து செய்து வர வாயுத்தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment