இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 28, 2017

ஜில்..ஜில்..ஜிகிர்தண்டா செய்வது எப்படி

மதுரை என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது மல்லி.அதற்கு அடுத்து ஜிகிர்தண்டா தான்.ஜிகிர்தண்டா பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.அந்த அளவுக்கு சுவையில் எல்லோரையும் கட்டிப்போடும் ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்.
பால்                                        -1லிட்டர் 
பாதாம் பிசின்                       -10 கிராம் 
சர்க்கரை                                -10  தேக்கரண்டி 
ரோஸ் சிரப்                           -3 தேக்கரண்டி 
நன்னாரி சிரப்                       -3 தேக்கரண்டி 
வெண்ணிலா ஐஸ் கிரீம்   -2 ஸ்கூப் 
உலர்ந்த திராட்சை &
முந்திரி,பாதாம்                   -சிறிதளவு 

செய்முறை 
  முதலில் பாதாம் பிசினை  நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும் .முதல் நாள் இரவே ஊற வைத்துவிடுவது நல்லது.பாலை நன்கு காய்ச்சி ஆறியதும் சர்க்கரை கலந்து பிரிட்ஜில் வைக்கவும்,பால் நன்கு குளிர்ந்ததும் வெளியே எடுத்து அதில் பாதாம் பிசின்,ரோஸ் சிரப் ,நன்னாரி சிரப் ,கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.அதன் மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம் உலர்ந்த திராட்சை,முந்திரி,பாதாம்  சேர்த்து  பரிமாறவும்.சுவையான ஜிகிர்தண்டா உங்கள் வீட்டு சுட்டிகளுக்காக தயார்.


No comments:

Post a Comment