இன்று நாம் வல்லரசு என்ற கனவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்.எல்லோரும் தன்னிறைவு அடையும் வகையில் வருமானத்தை ஈட்டிக்கொண்டு இருக்கிறோம்.பிள்ளைகள் நன்கு சாப்பிடுகிறார்கள், படிக்கிறார்கள்,கஷ்டங்களை உணர செய்யாமல் சுகம்,சந்தோஷம் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே பிள்ளைகளுக்கு காண்பித்து வளர்த்து வருகிறோம்.ஆனால் திடீரென ஒருநாள் உங்கள் பிள்ளைகள் உணவு,உடை,இருப்பிடம் என்று எதுவும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டால்.....நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா ...அப்படிப்பட்ட ஒரு சிலரிடம் மட்டுமே இந்த பதிவை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை சேர்த்து வைத்து இருப்பார்கள்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ..இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவர்கள் குடும்பம் எந்த சூழ்நிலையிலிருந்தும் வெளியே வந்துவிடும்.அனால் அளவாய் சம்பாதித்து,அளவாய் செலவுசெய்து,வீட்டு வாடகை ..பிள்ளைகள் படிப்பு..உற்றார் உறவினர் உடன்பிறந்தோர் கடமை என்று மெழுகுவர்த்தியாய் கரைந்துகொண்டிருக்கும் வீட்டு தலைவன் காலத்தின் சதியால் காணாமல் போனால் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்..அந்த குடும்பத்தின் பசி எங்கே போகும்..வானத்தின் கீழே ஒதுங்க அவர்களுக்கு எங்கே ஒரு கூரை கிடைக்கும்..சிரிக்கும் உறவுகளுக்கு மத்தியில் ஓடி ஒளிய இடம் தேடி எங்கே போவது..என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்றால் பல குடும்பங்களிடம் இருக்காது என்பதே பதில்.
தோழனாவது தோள் கொடுப்பான்.அனால் உறவு என்பவன் உடனிருந்தே உயிர்பலி வாங்குவான் என்று என் தோழி கூறியது ஞாபகம் வருகிறது.ஆனால் உண்மையில் இதுதான் இன்றைய நிலை .இந்த நிலைமை எல்லோருக்கும் மாறவேண்டும் என்பதே என் கனவு.அதற்காக பட்டினி கிடந்து,பழையதை சாப்பிட்டு,ஊரை கொள்ளையடித்து உலையில் போடவேண்டும் என்பது அல்ல.நன்கு சிந்தித்தால் அவரவருக்கே விடை தெரியும்.
பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை சேர்த்து வைத்து இருப்பார்கள்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ..இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவர்கள் குடும்பம் எந்த சூழ்நிலையிலிருந்தும் வெளியே வந்துவிடும்.அனால் அளவாய் சம்பாதித்து,அளவாய் செலவுசெய்து,வீட்டு வாடகை ..பிள்ளைகள் படிப்பு..உற்றார் உறவினர் உடன்பிறந்தோர் கடமை என்று மெழுகுவர்த்தியாய் கரைந்துகொண்டிருக்கும் வீட்டு தலைவன் காலத்தின் சதியால் காணாமல் போனால் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்..அந்த குடும்பத்தின் பசி எங்கே போகும்..வானத்தின் கீழே ஒதுங்க அவர்களுக்கு எங்கே ஒரு கூரை கிடைக்கும்..சிரிக்கும் உறவுகளுக்கு மத்தியில் ஓடி ஒளிய இடம் தேடி எங்கே போவது..என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறதா என்றால் பல குடும்பங்களிடம் இருக்காது என்பதே பதில்.
தோழனாவது தோள் கொடுப்பான்.அனால் உறவு என்பவன் உடனிருந்தே உயிர்பலி வாங்குவான் என்று என் தோழி கூறியது ஞாபகம் வருகிறது.ஆனால் உண்மையில் இதுதான் இன்றைய நிலை .இந்த நிலைமை எல்லோருக்கும் மாறவேண்டும் என்பதே என் கனவு.அதற்காக பட்டினி கிடந்து,பழையதை சாப்பிட்டு,ஊரை கொள்ளையடித்து உலையில் போடவேண்டும் என்பது அல்ல.நன்கு சிந்தித்தால் அவரவருக்கே விடை தெரியும்.
- உங்கள் குடும்பத்தின் தேவை என்ன..இருப்பிடம்...உங்களால் சொந்தமாக அமைத்து கொடுக்க இயலாவிட்டால் வாடகை இல்லாமல் லீஸ்- க்கு அமைத்து கொடுங்கள்.உங்கள் பிள்ளைகள் தலையெடுக்கும் வரை உங்கள் குடும்பம் கவுரவமாக, மாதங்கள் பிறந்தால் வாடகைக்கு வழியில்லாமல் நிற்கும் அவலநிலையின்றி இருக்கும் அல்லவா ..
- அன்றாட தேவைகளுக்கு உங்களால் சேர்த்துவைக்க முடியாவிட்டாலும் சிறு சிறு முதலீடுகளை சேமித்து வையுங்கள்.இன்சூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்யும்போது எப்போதும் சம்பாதிக்கும் நபரின் பெயரிலேயே பாலிசி இருக்கவேண்டும்.ஏனெனில் சம்பாதிப்பவரை நம்பிதான் மொத்த குடும்பம் இருக்கிறது.அவர் பாதிப்படையும்போது அவரின் பேரில் வரும் பணம் அவருடைய குடும்பத்துக்கு சிறு அளவிலாவது உதவும்.அவ்வாறு இல்லாமல் மற்றவர் பேரின் மேல் பாலிசி எடுக்கும்போது குடும்பத்ததலைவர் பாதிக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு எந்த பயனும் வராது.அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள பாலிசி காலத்தில் கட்டவேண்டிய பணத்தையும் அந்த குடும்பத்தால் கட்டமுடியாமல் போகும்.
- அடுத்த முக்கிய விஷயம் உங்கள் முதலீடு மற்றும் சொத்துக்களை வில்லங்கம் இல்லாமல் பாதுகாப்பது.என் பெற்றோர்..என் உடன் பிறந்தோர் என்று குடும்பத்தலைவர் நினைத்தாலும் அவருக்கு பின் அவருடைய மனைவி ,பிள்ளைகள் அனைவரும் குடும்பத்தலைவரின் உறவுகளுக்கு மூன்றாம் மனிதர்களாகவே தெரிவர்.இல்லை என்று வாய் சொன்னாலும் உண்மை என்ன என்று எல்லா குடும்பத்தலைவர்களுக்கும் தெரியும்.குடும்ப தலைவரை இழந்த நிலையில் ஒரு குடும்பம் தத்தளிக்கும்போது அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கைப்பற்றும் நிலையில் தான் பெரும்பாலான சொந்தங்கள் உள்ளன.ஒரு சில தான் இதற்கு விதிவிலக்கு.எனவேதான் இன்றைய காலகட்டத்தில் நம்மிடமிருந்தே நம்மை காத்துக்கொள்ளும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் எனலாம்.
- இது எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது.வாழ்வது ஒரு வாழ்க்கை தான்..அதில் பாதியை வாழ தெரியாமல் தொலைத்து இருக்கலாம்.இனி வரும் சொற்ப காலங்களில் குடும்பத்தை நேசியுங்கள்.அவர்களுக்காக உங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள்.ஒவ்வொருவருக்கும் தனித்தனி குடும்பம் உள்ளது.அவரவர் குடும்பத்தை அவரவர் பார்த்துக்கொள்ளும் திறமை வேண்டும்.தனக்கு மிஞ்சியது தான் தானமும்..தர்மமும்.உனக்கு இல்லாவிட்டால் நான் தருவேன்.எனக்கு இல்லாவிட்டால் நீ தருவாயா..என்று கேட்டு பாருங்கள்.எவனும் கிட்டே வரமாட்டான்.


No comments:
Post a Comment