இன்று பெரும்பாலான பெண்களுக்கு பெரும்பாடு எனும் அதிக உதிரப்போக்கு ஏற்படுகிறது .பதினைந்து இருபது நாட்கள் கூட உதிரப்போக்கு நிற்காமல் அவதியுறுகின்றனர்.அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நாம் மருத்துவ ரீதியாக காரணங்கள் அறிந்து சிகிச்சை பெறுவதற்கு முன்பாக உதிரப்போக்கை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம்.அதற்கு ஒரு எளிமையான வழி தான் ஆடாதொடா குடிநீர்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு குவளை நீர் எடுத்து அதனோடு ஐந்து ஆடாதொடா இலையையும் சேர்த்து ஒரு குவளையாக வற்றும்வரை கொதிக்க விடவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இதே போல் ஒரு நாளுக்கு மூன்று முறை குடிக்கலாம்.இது கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும் .இவ்வாறு குடித்து வரும்போது உங்களின் அதிகப்படியான உதிரப்போக்கு படிப்படியாக குறைவதை காணலாம்.இதை உங்கள் உறவுகளோடும் பகிருங்கள்.பயன்பெறட்டும்.
No comments:
Post a Comment