இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Dec 7, 2016

கருஞ்சீரக ஜுஸ் BLOCK CUMIN JUICE

இயற்கை தன்னுள் இத்தகைய பல பொருள்களை உள்ளடக்கியுள்ளது. மனிதர்கள் காலங்காலமாக அவற்றைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆனால், அலோபதி மருத்துவமுறையின் பிரவேசம் அத்தகைய இயற்கை வைத்தியமுறைகளை பின்தள்ளியுள்ளத
ு. இப்போது சிறிது சிறிதாக மனிதர்கள் இயற்கை முறையிலான வைத்தியத்தின் சிறப்பை உணர ஆரம்பித்து பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். இந்த எளிய கருஞ்சீரக ஜீஸ் பல நோய்களை குணப்படுத்தும்
தண்ணீர் - 3/4 கப்
எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
பட்டை பொடி - 1/4 ஸ்பூன்
கருஞ்சீரக எண்ணை(Black seed oil) - 5 சொட்டு
தேன் - 1 ஸ்பூன்


                                                      Image result for karunjeeragam                               
மேற்கண்ட அனைத்தையும் கலந்து காலை வெறும் வயிற்றிலும் மாலை இரவு உணவுக்கு பின்னும் அருந்தவும்.
எண்ணிலடங்காத நோய்களை உடலிலிருந்து விரட்டும் தன்மை கொண்டது.தினமும் தவறாமல் எடுத்து வர உடல் இளைக்கும்,பலம் பெறும். இறப்பை தவிற அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி கருஞ்சீரகத்திற்கு உண்டு என்பது இஸ்லாமியர்களின் தூதர் முஹம்மத் நபியவர்களின் கூற்று.
மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் கருஞ்சீரக எண்ணெய்க்கு உண்டு. அரை டீஸ்பூன் எண்ணயை எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
                                                                     
வலி நிவாரணி, கிருமிநாசினி; அழற்சி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுறையீரல் அடைப்பைப் போக்கவல்லது.
கல்லீரலைப் பாதுகாக்கின்றது, நீரிழிவை எதிர்க்கின்றது, சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது, புற்றுநோய்க்கான காரணிகளைத் தடுக்கும் சக்தியுடையது.
தோல் நோய்களை குறைக்கும்.
பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.

No comments:

Post a Comment