Pages

Feb 23, 2017

STR=SMILE,TALK AND RAISE YOUR HANDS மாரடைப்புக்கு ஒரு முதலுதவி

."மாரடைப்பு" இந்த வார்த்தையை கேட்டாலே ஒரு வித திகில் எல்லோர் மனதையும் ஆட்கொண்டுவிடும்.உலகம் முழுதும் அதிகம் பேர் பயப்படுவது மற்றும் பாதிக்கப்படுவது இதய நோய்களால்தான்.இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்தஓட்டத்தில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.இதை கண்டறிந்து சிகிச்சை பெறாவிடில் இறுதிக்கட்டமாக இதய செயலிழப்பு ஏற்படுகிறது.மாரடைப்பு வரும்போது அதற்கான அறிகுறிகளாக நெஞ்சு,முதுகு ,இடது கை  மற்றும் தோள்பட்டைகளில் வலியை ஏற்படுத்துகிறது.மேலும் வாந்தி,மயக்கம்,தலைசுற்றல் போன்றவையையும் ஏற்படுத்துகிறது.மாரடைப்பு ஏற்படுவதை உணரும்போது முதலுதவியாக ஆஸ்பிரின் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர் ஆனால் இது முதலுதவி மட்டுமே.உடனடியாக ICU எனப்படும் அவசர சிகிச்சை பிரிவு வசதியுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும்.மாரடைப்பு வந்தபிறகு எவ்வளவு விரைவாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறோமோ அந்த அளவுக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


வீட்டில் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும்போது முதலில் அவரை காற்றோட்டமான சமதளத்தில் படுக்கவைத்து அவரது நெஞ்சின் மையப்பகுதியில் இடதுகையின்  அடிப்புறத்தை வைத்து அதன் மேலே வலது கையை வைத்து நன்கு அழுத்தம்  கொடுக்கவேண்டும்.பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும்வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை இவ்வாறு அழுத்துவதை தொடரவேண்டும்.
மேலும் மாரடைப்பு வரும்போது STR என்ற எழுத்தை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
S =SMILE,  T=TALK,  R=RAISE BOTH ARMS
அதாவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் அதை உணராமல் சமாளித்துவந்தால்  அவரை சிரிக்கச்செய்யவேண்டும்,பேச செய்யவேண்டும்,இரு கைகளையும் மேலே தூக்க செய்யவேண்டும்.இதை அவரால் சரியாக செய்யமுடியாத பட்சத்தில் அவருக்கு வந்துள்ளது மாரடைப்பு என்று கணிக்கமுடியும்.அந்த கட்டத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நல்லது.

இந்த மூன்று செயலையும் அவர் சரியாக செய்துவிட்டாரென்றால் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள அவர் நாக்கை நீட்டசொல்ல வேண்டும்.அவர் நேராக நாக்கை நீட்டிவிட்டால் அவர் நலமாக உள்ளார்.அவ்வாறில்லாமல் இடம் அல்லது வலப்புறமாக சாய்த்து நீட்டினாலும் மருத்துவ உதவியை உடனே பெறவேண்டும் என்று அர்த்தம்.
இந்த பதிவு  யாரையும் பயமுறுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.இன்றைய மருத்துவ உலகில் முடியாதது எதுவும் இல்லை.மருத்துவ உதவி கிடைக்கபெறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்படி சிலவிஷயங்களை நாம் அறிந்து வைத்துக்கொள்ளும்போது யாருக்கேனும் பயன்பட்டால் உதவிய திருப்தி உங்கள் அனைவருக்கும் வரும்.அதற்காகவே இந்த பதிவு.



No comments:

Post a Comment